Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் வாழ்நாள் அறங்காவலர் கிருஷ்ணசாமி என்பவர் திருகோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதுடன், கையாடல் செய்து இருப்பதாகவும், கோவிலுக்கு எந்த வருமானமும் இல்லை என கூறி விட்டு தற்காலிக உண்டியல் மற்றும் நிரந்தர உண்டியல் வைத்து கையாடல் செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் கோவிலுக்கு சொந்தமாக 28 ஏக்கர் நிலம் இருந்தும் அதிலிருந்து வருமானம் பெற எந்த நடவடிக்கையும் அறங்காவலர் எடுக்காததும், திருமண மண்டபத்தை அன்னதான மண்டபம் என்று கணக்கு காட்டி, திருமண மண்டபத்தின் மூலம் வந்த வருவாயை கையாடல் செய்திருப்பதும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் தன்னிச்சையாக திரு.மூர்த்தி என்பவரை அறங்காவலராக நியமித்திருப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அறங்காவலர் கிருஷ்ணசாமியை தற்காலிக பதவி நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.